கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியில் கட்சியினுடைய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார்.
காட்டுமன்னார்கோயில் தொகுதியில் நேரடியாக போட்டியிடப்போவதாக திருமாவளவன் அறிவித்த நிலையில் புதிய திருப்பமாக வேறு முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக 8 தொகுதிகளில் போட்டியிடக்கூடிய நிலையில், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியில் கட்சியினுடைய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார்.
“தமிழக மாநில அரசியலில் நாம் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்தச் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு அரசியல் சூழல், வெகுவாக மாற இருக்கிறது. இந்த நிலையில், காட்டுமன்னார்கோயிலில் நான் போட்டியிடுகிறேன்” எனவும் திருமாவளவன் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவித்த நிலையில், 6ஆம் தேதி அன்று வேட்புமனு தாக்கல் செய்வதாக அறிவித்திருந்தார். இதற்கிடையே, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாகவும் அதற்கு பதிலாக வேறு ஒருவரை நிற்க வைப்பதாகவும் தற்போது திருமாவளவன் முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கூட்டணி கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் பரப்புரை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை திருமாவளவனிடம் வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை ஏற்று தேர்தலில் போட்டியிடுவது குறித்து மறுபரிசீலனை செய்து வருவதாகவும் இதுகுறித்து திருமாவளவன் பேசவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநில அரசுக்கு திருமாவளவன் வருவது குறித்து பேசப்பட்டு வந்த நிலையில் இந்த முடிவை திருமாவளவன் எடுத்திருப்பது புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
சென்னை (மெட்ராஸ்), சென்னை, தமிழ்நாடு