Flash News

கர்ப்பமான ஜனனிக்கு இப்படி ஒரு பிரச்சனையா? டாக்டர் பேச்சைக்கேட்டு பதறிய சக்தி – எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்



எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி மயக்கம் போட்டு விழுந்த நிலையில், அவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார் டாக்டர். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்துள்ள ஜனனி வீட்டுக்கு வந்ததை அடுத்து அவரை உற்சாகம் பொங்க பெண்கள் வரவேற்றுள்ளனர். அவரின் வரவால் ஆதி குணசேகரனும் அவரது தம்பிகளும் அப்செட்டாகி இருந்தாலும், வீட்டில் ஆதி முத்துவுக்கு திதி கொடுப்பதற்கான வேலைகள் அனைத்தும் முழுவீச்சில் நடக்கிறது. அதற்காக அனைவருக்கும் புது டிரெஸ் எடுத்துக் கொடுத்திருக்கிறார் ஆதி குணசேகரன். அதை அனைவரும் உடுத்தி வந்து பூஜையில் அமர்ந்திருந்தனர். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

பூஜையின் போது திடீரென எழுந்து சென்ற ஜனனி வாந்தி எடுத்திருக்கிறார். பின்னர் தனக்கு மயக்கம் வருவதாக சொன்னதை அடுத்து அவரை மாடிக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். சக்தி, டாக்டரை போன் போட்டு வரச்சொல்லி இருக்கிறார். பூஜை நல்லபடியாக நடக்கக் கூடாது என்பதற்காக தான் ஜனனி இப்படி டிராமா போடுகிறார் என அறிவுக்கரசி சொல்ல, சிறிது நேரத்தில் டாக்டர் வந்து ஜனனியை செக் பண்ணுகிறார். அப்போது அவர் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்கிறார். இதைக்கேட்ட சக்தி, விசாலாட்சி, நந்தினி, ரேணுகா, தர்ஷினி, பார்கவி ஆகியோர் சந்தோஷப்படுகிறார்கள்.

இருந்தாலும் ஜனனி மிகவும் வீக் ஆக இருப்பதாக சொல்லும் டாக்டர், ஜனனி இனிமே நல்லா ரெஸ்ட் எடுக்கணும், ஹெல்தியா சாப்பிடனும் என சொல்கிறார். பின்னர் சக்தியிடம் பேசும் டாக்டர், மாலையில் ஜனனியை கிளீனிக் அழைத்து வரச் சொல்கிறார். அங்கு ஒருமுறை ஸ்கேன் பண்ணி பார்க்கலாம் என கூறுகிறார். கிளம்பும் முன் சக்தியை தனியாக அழைத்து பேசுகிறார் டாக்டர். ஜனனி ரொம்ப வீக்கா இருக்காங்க. அதை நம்ம, சாப்பாட்டாலும், மாத்திரையாலும் சரி பண்ணிவிடலாம். ஆனால் அவர் எந்தவித பிரஷரும் இல்லாமல் மன நிம்மதியோடு இருப்பது ரொம்ப முக்கியம். வேற எதுவும் பிரச்சனை இல்லை என கூறுகிறார் டாக்டர்.

ஜனனி கர்ப்பமாக இருப்பதை அறிந்ததும் ஆனந்தக் கண்ணீர் சிந்தும் விசாலாட்சி, என் மனசுல உன்னைப் பத்தி ஆயிரம் சந்தோஷம் இருந்தாலும், ஒரே ஒரு குறை இருந்துட்டே இருந்தது. ஆண்டவன் புன்னியத்துல அதுவும் நிறைவேறிடுச்சு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. மற்ற பேரப்பிள்ளைகளெல்லாம் பிறக்கும் போது, நான் வேறமாறி இருந்தேன். ஆனால் உன் புள்ள பிறக்குறப்போ தெளிவா இருக்கேன். இதை நான் எப்படி கொண்டாடப்போறேன்னு பாரு. உன்னையும், என் பேரப்பிள்ளையும் நான் தான் பாத்துக்குவேன் என விசாலாட்சி சொல்ல, நாங்களும் பாத்துக்குவோம் என கவுண்டர் கொடுக்கிறார் நந்தினி.

ஜனனி கர்ப்பமான விஷயம் ஆதி குணசேகரன் கேங்குக்கு தெரிய வந்தால் என்ன செய்யப்போகிறார்கள்? அதுவும் அறிவுக்கரசியை வைத்து ஜனனியின் கர்ப்பத்தை களைக்க பிளான் போடவும் வாய்ப்பு இருக்கிறது. ஜனனி குழந்தை பெற்றெடுப்பதற்குள் என்னென்ன பிரச்சனையெல்லாம் சந்திக்கப் போகிறார். டாக்டர் மன நிம்மதி முக்கியம் என சொல்லி இருக்கிறார். அது ஜனனிக்கு கிடைப்பது கஷ்டம். அதனால் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



Thank You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *