– விளம்பரம் –
மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா கடைசியாக ஆர்.சி.பி அணிக்கு எதிராக மும்பை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதன் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். இதன் காரணமாக இன்று ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெற்று வரும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
ரோஹித் சர்மாவின் காயம் குறித்து : ஹார்டிக் பாண்டியா பேச்சு
அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசி வருகிறது. இந்நிலையில் இன்றைய பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாசில் தோல்வி அடைந்ததற்கு பிறகு பேசிய மும்பை அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா அணியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பேசும்போது :
– விளம்பரம் –
ரோகித் சர்மாவின் காயம் குறித்த தகவலையும் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த போட்டியில் நாங்களும் பந்துவீச தான் நினைத்தோம். ஆனால் டாசில் தோற்றது நல்ல விடயம் தான். இன்றைய போட்டியில் நாங்கள் ஒரு நல்ல கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். எனவே முதலில் பேட்டிங் செய்துவிட்டு பெரிய ரன் குறிப்பை அடித்து அடுத்ததாக அவர்களை கட்டுப்படுத்த விரும்புகிறோம்.
இன்றைய போட்டியில் ரோகித் சர்மா விளையாடவில்லை. கடந்த போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் இந்த போட்டியை தவற விட்டுள்ளார். அதுமட்டும் இன்றி இன்னும் இரண்டு ஆட்டங்கள் அவர் விளையாட மாட்டார் என்று நினைக்கிறேன். அதன்பிறகு அவருடைய காயத்தின் தன்மை எவ்வாறு இருக்கிறது? என்பதை பரிசோதிக்க பிறகே அவரது நிலை தெரியவரும் என்றும் ஹார்டிக் பாண்டியா குறிப்பிட்டுள்ளார்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : சன் ரைசர்ஸ் அணிக்கு வந்துள்ள நற்செய்தி.. அணிக்கு திரும்பும் பேட் கம்மின்ஸ் – எப்போது தெரியுமா?
இதன் மூலம் ரோகித் சர்மா இன்றைய பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி மட்டுமின்றி அடுத்ததாக நடைபெற இருக்கும் போட்டியையும் தவறவிடுவார் என்று தெரிகிறது. அதுவரை ரோகித் சர்மாவின் இடத்தில் குவிண்டன் டி காக் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்