48 மணி நேரத்தில் உருவாகும்  காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் தகவல் – Kumudam


இது குறித்து ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வறண்ட வானிலை நிலவி வருகிறது. சென்னை உள்பட வட மாவட்டங்களில் வழக்கத்தை விட பனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று அதிகாலையிலும் பனியின் தாக்கம் சென்னையில் அதிகமாக இருந்தது. வரும் நாட்களிலும் பனியின் தாக்கமும் இருக்கும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். அடுத்த 48மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 20-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

21-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



Thank You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *