Flash News

how to apply new tn unemployment certificate online 2026 | வேலையின்மை சான்றிதழ்: தமிழக அரசின் அதிரடி மாற்றம் – இனி இசேவை மூலம் உடனே பெறலாம்!


TN Unemployment Certificate : தமிழக அரசு, பொதுமக்களுக்கான சேவைகளை விரைவுபடுத்தவும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிர்வாகத்தைச் சீரமைக்கவும் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு தேவைகளுக்காகப் பெறும் ‘வேலையின்மை சான்றிதழ்’ (Unemployment Certificate) வழங்கும் முறையில் இருந்த சிக்கலான நடைமுறைகளை நீக்கி, புதிய அரசாணையை (G.O. Ms. No. 189) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ளது.

Zee செய்திகளை விருப்பமான ஆதாரமாகச் சேர்க்கவும்

பழைய முறையில் இருந்த சிக்கல்கள் என்ன?

இதுவரை ஒரு நபர் வேலையின்மை சான்றிதழ் பெற வேண்டுமானால், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் என மூன்று நிலைகளில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட வேண்டும். இதில் கையொப்பம் பெற நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. மேலும், பல நேரங்களில் உரிய ஆவணங்கள் இருந்தும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவது அல்லது வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பது போன்ற புகார்கள் எழுந்தன. இதனைச் சீரமைக்கவே ‘SimpleGov’ திட்டத்தின் கீழ் இந்த மாற்றத்தைக் கூடுதல் தலைமைச் செயலாளர் பி. அமுதா ஐஏஎஸ் அறிவித்துள்ளார்.

புதிய நடைமுறை: இனி விண்ணப்பிப்பது எப்படி?

தமிழக அரசின் புதிய வழிகாட்டுதலின்படி, இனி விண்ணப்பதாரர்கள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரடியாகச் செல்லத் தேவையில்லை. இ-சேவை மையங்கள் அல்லது இணையதளம் வாயிலாகவே சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.

கேள்வி பதில் வடிவில் விண்ணப்பம்: விண்ணப்பப் படிவத்தில் நீங்கள் எதற்காகச் சான்றிதழ் கோருகிறீர்கள் என குறிப்பிட வேண்டும். உதாரணமாக வங்கியிலிருந்து தொழில் கடன் பெற, கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அல்லது அரசு நலத்திட்டங்கள் பெற என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். அதற்கேற்ப கேள்விகள் மாறும்.

தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை, பான் கார்டு, கல்விச் சான்றிதழ்,

சுய உறுதிமொழி : விண்ணப்பதாரர் தான் தற்போது எங்கும் பணியில் இல்லை என்பதையும், எந்த நிறுவனத்திடமிருந்தும் ஊதியம் பெறவில்லை என்பதையும் உறுதிப்படுத்தும் வகையில் ஆன்லைனில் ஒரு உறுதிமொழியைச் சமர்ப்பிக்க வேண்டும். இதில் நோட்டரி கையொப்பம் பெறுவது உண்மைத்தன்மையை அதிகரிக்கும் என அரசு பரிந்துரைத்துள்ளது.

தானியங்கிச் சான்றிதழ் பெறலாம்

புதிய முறையின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், நீங்கள் விண்ணப்பித்தவுடன் உங்களின் தரவுகள் டிஜிட்டல் முறையில் சரிபார்க்கப்படும். அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில், மனிதத் தலையீடு இன்றி வட்டாட்சியரின் பெயரில் தானாகவே சான்றிதழ் உருவாக்கப்படும். இதனை நீங்கள் நேரடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்

இந்த முறை முற்றிலும் வெளிப்படையானது. வருங்காலத்தில் தவறான முறையில் சான்றிதழ் பெறுவதைத் தவிர்க்க, பின்வரும் முக்கிய தரவுத்தளங்களுடன் இந்த இணையதளம் இணைக்கப்படும்:

EPFO: நீங்கள் தனியார் நிறுவனத்தில் பி.எப் (PF) கணக்குடன் வேலை செய்கிறீர்களா என்பதைச் சரிபார்க்க.

IFHRMS: அரசு ஊழியர்களின் தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க.

Income Tax (IT): உங்கள் வருமானம் மற்றும் வருமான வரி தாக்கல் விவரங்களை உறுதிப்படுத்த.

SFDB (State Family Data Base): மாநில குடும்ப தரவுத்தளம் மூலம் உங்களின் குடும்பப் பின்னணியைச் சரிபார்க்க.

விதிமுறைகளும் எச்சரிக்கையும்: போலி சான்றிதழ் ஆபத்து

அரசாணையில் போலி தகவல்கள் குறித்து மிகவும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1. தவறான தகவல்: விண்ணப்பிக்கும்போது வேலை குறித்த விவரங்களை மறைத்து அல்லது பொய்யான ஆவணங்களைச் சமர்ப்பித்துச் சான்றிதழ் பெற்றது பின்னாளில் தணிக்கையின் (Audit) போது தெரியவந்தால், அந்தச் சான்றிதழ் உடனடியாக ரத்து செய்யப்படும்.

2. பறிமுதல்: அந்தச் சான்றிதழைப் பயன்படுத்திப் பெற்ற கடன் உதவிகள், மானியங்கள் அல்லது உதவித்தொகைகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்.

3. கிரிமினல் நடவடிக்கை: அரசு அதிகாரிகளைத் தவறாக வழிநடத்தியதற்காகவும், முறைகேடாகச் சான்றிதழ் பெற்றதற்காகவும் சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

நிர்வாக ரீதியான உத்தரவுகள்

இந்த நடைமுறை மாற்றங்களை உடனடியாகச் செயல்படுத்த தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) மற்றும் வருவாய் நிர்வாக ஆணையருக்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான மென்பொருள் மாற்றங்கள் மற்றும் ஆவண மேலாண்மைப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த முன்னெடுப்பு, வேலைதேடும் இளைஞர்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாகும். அலைச்சலைக் குறைத்து, ஊழலற்ற முறையில் டிஜிட்டல் வழியாகச் சான்றிதழ் பெறுவது தமிழகத்தின் மின் ஆளுமைப் பயணத்தில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்க முடியாது – தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : ரூ.5000 வரவில்லையா? பெண்கள் 3 விஷயங்களை சரிபார்க்கவும்

மேலும் படிக்க – தொழில் துவங்க ஆசையா? தமிழக அரசின் டாப் 4 இலவச பயிற்சிகள்.. எங்கு? எப்போது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android இணைப்பு: https://bit.ly/3AIMb22

ஆப்பிள் இணைப்பு: https://apple.co/3yEataJ





Thank You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *